Friday, November 26, 2010

தொடருட்டும் உன் பயணம் இதமாக.....

யாரும் இல்லாத உலகில் தன்னந்தனியாய்
நடை பழகிய என்னுடன் கைகோர்த்தவன் நீயடா

என்னை சிரிக்க வைத்தாய்
சிலிர்க்க வைத்தாய்
அழவும் கூட வைத்தாய்
சிலநேரம் என் நிழலாய்
என்னை தொடர்ந்தாய்
பல நேரம் தொலை தூரமானாயடா
தொடுவானமாய்...

ஒரேவகுப்பில் உன் அருகில் நான் இருந்த
போதும் என்னை கண்டும் காணாதவன் போல
நீ நடித்த நாட்கள் தான்
எத்தனை எத்தனையடா?

தினமும் வரவு பதிவேட்டில் உன் கிறுக்கலான
கையெழுத்தை என் விரல்கள்
தடவிப் பார்த்து மகிழ்ந்த நாட்கள்
தான் எத்தனை எத்தனையடா....

உன் மென்னையான வெள்ளை உள்ளத்திற்குள்ளும்
எங்கேயடா ஒழித்து வைத்திருப்பாய்
உன் பொல்லாத அந்த கோபத்தை
நேரம் பார்த்து விஸ்வரூபம் கொண்டு
வெளியே குதிப்பதற்கு...

நீ என்னை கடந்து செல்லும் போதெல்லாம்
உன் சுவாசகாற்றையே நானும்
சுவாசித்தேனடா
தினமும் உன் வீட்டை திரும்பி; பார்ப்பதில்
அப்பிடி ஒரு சந்தோசம் ஏதோ
உன்னையே தரிசித்தது போல்

உன் சின்னச் சின்ன அசைவுகளைக் கூட நான்
விரும்பி யாசித்டதேனடா
உனக்கு தெரிந்தும் தெரியாததைப்போல்
நான் வாசித்த முதல் கவிதை கூட நீதானடா
உன்சலசலத்த பேச்சும் சிரிப்பொலியுமே
என் மனம் விரும்பி ரசிக்கம் சங்கீதங்கள்

உன் நண்பர்களின் ஜோக்குகளும் அலட்டல்களும்
அவர்களடன் இணைந்து இந்த உலகத்தையே
மறந்த நாட்கள் தான் எத்தனையடா
இன்னும் எத்தனை எத்தனை சம்பவங்களடா
சுகமான தூரல்களாய் எம்மை முத்தமிட்டு
சென்றன....

போடா..!
எல்லாமே இன்றுடன் எம் மன ஏட்டில் பதிந்து போன
சுவடுகளாகின்றதடா
உன்னை மட்டுமே காணத்துடிக்கம் என்
விழிகள் இனி பாவமடா..
அந்த இனிமையான நாட்கள்
எல்லாம் மீண்டும் நம் வாழ்வில் தொடராதா
என்று என் மனம் ஏங்கி தவிக்கதடா!

காலம் தான் எம் பயணத்திற்கு முற்றுப்புள்ளி
வைத்து விட்டது.
அதை மீண்டும் புள்ளிகள் இட்டு தொடரும்
சக்தி எனக்கில்லையடா
இன்று நீ கூட என்னை தவிக்க விட்டு விட்டு தனியாக
உன் பயணத்தை தொடர்கிறாய்
எப்படியடா உன்னால் மட்டும் முடிகிறது.

கண்ணீருடன் விடை தருகிறேன்
உன் பயணம் முடிவில்லாது
தொடர்வதற்காய் வேறு திசையில்
மீண்டும் தனிமையில் நான்
உன் நினைவுகளுடன்...

Monday, November 8, 2010

அன்றைய நாள்...

எத்தனை மணி நேரம்
பாவம் வயல் வரம்பிற்கு கூட வலித்திருக்கும்
ஊர் கதையில் தொடங்கி
உள்ளத்து உணர்வுகள் வரை
பரிமாறிய அன்றைய நாள்...

மெல்லிய நீல நிறத்தில்
பாவாடை தாவணி...
விரித்துவிட்ட உன் கூந்தல்
வேதனையுடன் ஒரு அறுகம் புல்
உன் கையில்...
நடந்துகொண்டே வயல் வரம்பளந்தோம்....

பொழுது சாயும் அந்தி நேரம்
வானம் பார்க்க ஆசைப்பட்டு
வந்திருந்தாய் வயல் வெளிக்கு
வானம் என்னடி வானவில் நீதானடி
எனக்கு அன்று அழகாய் தெரிந்தாய்...

என்றும் இல்லாதவாறு அன்றைய நாள்
உன்னை தொட்ட தென்றல்
என்னை வருடும் போது ஏதோ ஒரு
புல்லரிப்பு. அந்த நொடி கண்ணை மூடி
நானும் காற்றி கலந்தேன் இரண்டாம் முறையாக...

உன் கண்களை நான் எப்போதும்
பார்த்ததில்லை. உன்னைப்பார்க்கும் போது
மட்டும் நான் கோழையாகிறேன்....
சில சமயம் கோமாழியாகவும் கூடத்தான்...

மாமன் மகள் தானே
மஞ்சள் கயிறு நான் தானே
கட்டுவேன் என்று ஒரு
வைராக்கியம் எனக்குள்...

தட்டிக்கொடுக்க எனக்கு
யாரும் இருந்ததில்லை
தலையணை கூட என்னை
அணைத்ததில்லை.
தவறி ஏதாவது கனவு கண்டாலும்
காட்சிகள் கண்ணில் தெரிவதில்லை...

உள்ளே மனம் சொல்லும்.
குரங்கு வேடம் போட்டு
குத்துக்கறணம் அடித்தாவது
அவளை சிரிக்க வை என்று...
உன் புன்கையில் பலகோடி
உயிர் வாழும்...

நானும் வாழ்ந்திருப்பேன்
கோடியில் ஒருத்தனாய்...
நான் இறக்கும்முன் நீ பிறந்திருந்தால்... !

Sunday, October 10, 2010

கதிரவனின் மறைவு...


இன்றைய இரவுகளும் நாளைய விடியல்களும்
உன்னைத் தேடுகிறது.
ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம்
அலை கடல் எனத் திரழ்கிறது.
மனிதம் கொண்ட மனிதர்கள்
மனதில் நாயகன் நீ இன்று.
ஒரு துளியும் இரக்கம் இன்றி
ஓர் இனத்தின் எதிர்காலத்தையே
கொன்றொழித்த களைப்பில்
காடையர் கூட்டம்...
கரைகிறது என் மனம்.
கசிகிறது உன் நினைவுகள்.
காவியத் தலைவனே
காதலடா உன்னில் எனக்கு.
கதிரவனுக்கு ஏதடா மறைவு
காதல் கொண்ட உன்
நினைவுகளுக்கேதடா அழிவு.
இன்றும் புல்லரிக்கின்றது எனக்கு
உன்னுடைய தாகங்கள்
என்னுடைய நாடித்துடிப்பாய்
அமைந்ததை நினைக்கையில்...

Saturday, October 9, 2010

நேசித்த நினைவுகள்...

உயிரும் மெல்ல உடைகிறேன் என்கிறது
உடலை விட்டுப் பிரிகிறேன் என்கிறது
மனமும் உனக்காய் ஏங்கித் தவிக்கிறது
மரணமும் எனக்கு பக்கமாய் தெரிகிறது

உன்னை நேசித்த நினைவுகள் நெஞ்சை பிளிகிறது
உன்னிடம் யாசித்த பொழுதுகள் கண்ணீராகிறது
நெஞ்சம் வெடித்தது நேசம் கசந்தது
உலகும் வெறுத்தது உடலும் இயங்க மறுத்தது

உன்னைக் கண்டது காதல் கொண்டது
உனக்காய் உருகி நின்றது கனவுகள்
வளர்த்தது என் விழிகளில் உன்னை சுமந்தது.....
எல்லாமே பாவமானது.....

பாதை இல்லாத சுவடுகள் நோக்கியே என்
பாதமும் நடை போட்டு வலியால் துடிக்கிறது
பிறந்த பாவமாய் என் வாழ்க்கையானது
உன்னை பிரிந்ததே கொடுமையானது

தினமும் பிதற்றுகிறேன் கனவிலும்
உனக்காக மதி கெட்டவளாய்
தன்னைத்தானே வெட்டிப்பார்ப்பதாய்
எனக்குள் வலிகள் சொந்தமானது

உறவுகளும் என்னை வெறுத்தது
உயிரும் எனக்குள் கனத்துப்போனது
ஒவ்வெரு நொடியும் யுகமாய் தெரிந்தது
விடியலும் ஒளி இழந்த அஸ்தமனமானது

நேசித்த நீ என்னை வெறுத்ததால்
என் வானமும் கார்காலமானது
என் தலைசாய்க்க உன் உறவு இல்லாததால்
வாழ்வை வெறுக்கிறேன்

வாழ மறுக்கிறேன்
பிரிவை ஏற்கிறேன்
சாவை அழைக்கிறேன்
வந்த இடத்திற்கே மீண்டும் போகத் துடிக்கிறேன்
போகும் வழி தெரியாமல் தத்தளிக்கிறேன்
வழி காட்டிடுமா உன் கலங்கரை.......?

Sunday, April 11, 2010

அந்த நொடி...

மேசையோரம் சில மாத்திரை உருண்டைகள்.
ஒளி அற்ற இருண்ட அறையில்
ஒரேயொரு மெழுகுவர்த்தி மட்டும்
உருகிக் கொண்டிருந்தது.

அயலவர்கள் எங்கு சென்றனரோ
அறை முழுவதும் அமைதியாகவே இருந்தது.
சுய நினைவை இழந்த ஒருவன்
மேசை மீது படுத்திருக்கிறான்.

எழுதியதும் எழுதாததுமாக காகிதங்கள்
அங்கும் இங்கும் பரந்து காணப்பட்டது.
சிந்தித்து களைத்தே அவன்
சுய நினைவை இழந்திருக்க வேண்டும்.

தலையை தூக்க முயற்சித்தேன் முடியவில்லை.
விறைத்து விட்டது போலும். மேசை மீது
இரத்தக் கறைகள் கைகளில்
இருந்து கசிந்துகொண்டிருந்தது.

கண்களை திறந்தபடியே உயிர் பிரிந்திருக்கின்றது.
நெஞ்சை அணைத்தபடி மறு கை.
அங்கு ஒரு பெயர் நெருப்பால் சுடப்பட்டிருந்தது.
அது கூட காயவில்லை.

அவ் ஜீவனின் வலிலை என் மனமும்
அனுபவித்ததோ என்னமோ
கண்கள் கலங்கியது.
மனம் கனத்தது. இறுதி கணப் பொழுதுகளை நினைத்து...

Saturday, April 10, 2010

இதயத் துடிப்புக்கள்...

கனவுகள் கனமாகும் போது
கண்கள் மட்டுமல்ல மனமும்தான் கலங்குகின்றது.
கணப்பொழுதாவது உங்களைக் காணக் கூடாதா என்று
துடிப்பது என் கண்கள் மட்டுமல்ல இதயமும் தான்

நினைவுகளை மட்டும் சுமந்த நின்மதியற்ற வாழக்கை
தினந்தோறும் விடிகின்றது பொழுது யாரோ சொன்னாங்க
சிதறுகின்ற சிந்தனைகளை சேர்க்கத்தான் எண்ணுகின்றேன்
சிந்தையில் தேங்குகின்றது உங்கள் முகம்.

வலிகள் வேதனைகள் தாண்டியவ வாழ்க்கை
வந்தடைந்த இடம் என்ன சொர்க்கமா...?
சுந்தரிகளுடன் சொப்பனத்தில் கலக்க.!
செர்க்கம் என்ற பெயர் கொண்ட நரகமடா.

தேடினோம், கூடினோம், துயர்களும் பகிர்ந்தோம்
நட்பின் அர்த்தம் புகட்டிய என் இனிய தோழர்களே
எங்கேயடா தேடுவேன் உங்கள் முகங்களை
தோழிகளே எங்கே சாய்ப்பேன் என் தலையை...

கனக்கின்றது என் மனம்
நெஞ்சம் வலிக்கும் போதெல்லாம்
தனிமையை நாடுவேன் நினைவுளை மீட்டிப் பார்ப்பேன்
அந்த நாள் ஞாபகங்கள் இன்றும்....

கூடித்திரிந்த பொழுதுகள் பரிமாறிய வார்த்தைகள்
செத்துப் பிளைக்க வைக்கும் தருணங்கள்.
எத்தனை எத்தனையோ நினைவுகள்
என் இதயம் நின்றாலும் ஆச்சரியத்திற்கு இல்லை....

Tuesday, March 16, 2010

ஏதேதோ ஞாபகங்கள்...

பயணப்பாதை தொடர்கிறது
பாதையோர மரங்கள் ஓடும் வேகத்தில்
பளசெல்லாம் நினைவுக்கு வருகிறது...
பல வருடங்கள் நான் உன்னை நீங்கி.
பரிதவித்துப் போனேன் போடி..

படபடத்த நகர வாழ்க்கை
இல்லை இல்லை நரக வாழ்க்கை
காலமெல்லாம் உன்னைக் கட்டியணைத்து
கதைபேசவே நினைத்தேன்
காலம் தான் எம்மைப் பிரித்து வைத்தது.....
கரைந்த வழி நீருக்கும் அன்புகசிந்த
உன் மனமும் என்னை வாட்டுகிறது. வருடுகிறது.
நான் சோர்வடையும் போதெல்லாம்
தட்டிக் கொடுக்குட'; உன் கரங்கள்....
சலசலல என்ற உன்சப்தம் என்
மன சஞ்சலங்களை போக்கும்.

உழைத்த களைப்பில் ஓடோடி வந்து
உன்னை முத்தமிடுவேன்.
தூக்கம் தானாகவே என்னை முத்தமிடும்.
பூர்வ ஜென்ம பந்தம் உனக்கும் எனக்கும்.

நீ என்னை தாண்டம் போது என்
உரோமங்கள் சிலிர்க்கின்றது.
சிந்தனைகள் புத்தாக்கம் பெறுகின்றது.
உன்னைக் காண்பதென்றால்
என் கண்களுக்கும் கூட அவா....

தேடுகிறது திசை எங்கும்
திரண்ட உன் அழகைக் காண....
என் இயற்கை அன்னையே...

Pages